சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய மந்திரம்

சுகப்பிரசவம் ஆக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்

ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூலின்
சம்போ சுகப்ரஸவக்ருத் பவமே தயாளோ
ஸ்ரீமாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே

thayumanavar mantram

இந்த சுலோகத்தை, கர்ப்பமாய் இருக்கும் பெண்கள், தினமும் மூன்று முறை சொல்லி இறைவன் சிவனை வழிபட்டால் அவர்களுக்கு பிரசவத்தில் எந்த பிரச்னையும் இன்றி சுகப்பிரசவம் நிகழும்.

திருச்சி மலைக்கோட்டையில் இடைக்கோயிலின் மூலவரான செவ்வந்திநாதர், செட்டிப்பெண்ணுக்கு அவளது தாய் உருவில் வந்து பிரசவம் பார்த்து தாயுமானவர் ஆனார். அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு கரைபுரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது, இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து தாயையும் சேயையும் காத்தருளினார் சிவபெருமான்.

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் இந்த சுலோகத்தை சொல்லி வணங்குவதால், சிவனே தாயுமானவனாக இருந்து காத்தருள்வார்.